15. அருள்மிகு தாளமுடையார் கோயில்
இறைவன் தாளமுடையார், சப்தபுரீஸ்வரர்
இறைவி ஓசை கொடுத்த நாயகி
தீர்த்தம் சூரிய தீர்த்தம்
தல விருட்சம் கொன்றை
பதிகம் திருஞானசம்பந்தர், சுந்தரர்
தல இருப்பிடம் திருக்கோலக்கா, தமிழ்நாடு
வழிகாட்டி தற்போது 'தாளமுடையார் கோயில்' என்று அழைக்கப்படுகிறது. சீர்காழி பெரிய கோயிலுக்கு மேற்கே 1 கி.மீ. தொலைவில் உள்ளது.
தலச்சிறப்பு

Thirukolakka Gopuramதிருஞானசம்பந்தருக்கு சிவபெருமான் பொற்றாளம் அளித்த தலம். இப்பொற்றாளத்திற்கு ஓசை கொடுத்தால், அம்பிகை 'ஓசை கொடுத்த நாயகி' என்று அழைக்கப்படுகிறார்.

Thirukolakka AmmanThirukolakka Moolavarமூலவர் 'தாளமுடையார்', 'சப்தபுரீஸ்வரர்' என்னும் திருநாமங்களுடன், சதுர ஆவுடையுடன், பெரிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பிகை 'ஓசை கொடுத்த நாயகி' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.

இக்கோயில் காலை 7 மணி முதல் 11 வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com